இதயம் தொட்ட இரண்டாம் ஆண்டு இஞ்சினியரிங் மாணவர்களே
என் இனிய மனதிற்கினிய மாணவர்களே
இதயத்தை தொட்டுவிட்ட இனிய கீதங்களே இரண்டாம் ஆண்டு இஞ்சினியரிங் IITATபேசெட் மாணவர்களே இன்னுயிர் நான் எடுக்க காரணம் நீங்கள் தானோ? இனி என்னுயிர் போனாலும் என் மனது கரையாது எந்தெந்த ஊரில் எங்கெங்கு யார்யார்க்குப் பிறந்தீரோ என் பிறவி இனிமை பெற என் மாணவனாய் வளர்ந்தீரோ என் நாட்கள் இன்னும் எத்தனை என்று எண்ணும் நாட்கள் எனினும் உங்களோடு நான் இருக்கும் நேரம் சொர்க்க நேரம் சொந்தம் கொண்டாடிட எனக்கு அனுமதி உண்டா ஆண்டவனே சொக்கத் தங்கங்கள் சொல்லும் கனிவு வார்த்தை கேட்க சொச்ச நேரம் தந்த இறைவன் இன்னும் நாட்கள் நீட்டிப்பானா சொல்ல முடியவில்லையே உறுதியாக உடல் தளருகிறதே உள்ளம் தளரவில்லை நான் உங்களுக்குக்காக உழைக்க உள்ள இரவையும் பகலாய் ஆக்கி பாடம் எழுதிகிறேன் உவகையோடு உங்களை உயர்த்த நீங்க்ள் உன்னதம் பெற உள்ள நாளெல்லாம் உங்களுக்காகவே உறுதியாக சொல்லுகிறேன் மாணவ தொழுவத்தில் மலர்ந்திட்ட வெள்ளைப் பசுக்களே மாறாது உங்கள் வெள்ளை மனது நானறிவேன் அது பால் மனது மாண்டு போனாலும் நான் உங்களை ஆண்டு போனதால் அகமலருகிறது மலரும் பூமி நீங்கள் மட்டிலா மகிழ்வை எய்துவீர்கள் மாணவர்களே நலமாக நீங்கள் வாழ வளமாக இயந்திரவியல் துணைபுரியட்டும் நன்றாக உங்கள் வாழ்வு சிறக்கட்டும் உங்கள் புகழ் சிறகடித்து பறக்கட்டும் நானிலத்தில் நல்லவனாய் நாடுபோற்றும் வல்லவனாய் நீங்கள் வாழ்க நான் என் மாணக்கர்கட்கு மகிழ்வோடு வாழ்த்துச் சொல்லுகிறேன் நீ தான் என் மாணவன். தமிழ்த் தாமரை கவி பேரா. ந. இன்பகரன். |